செய்திகள் மலேசியா
எஸ்பிஎம் தேர்வில் தமிழ் இலக்கியத் தேர்வு எழுத 12 மாணவர்களுக்கு அனுமதி இல்லை: கல்வியமைச்சு கவனிக்குமா?
பெடோங்:
எஸ்பிஎம் தேர்வில் தமிழ் இலக்கியத் தேர்வு எழுத 12 மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்ற விவகாரத்தை கல்வியமைச்சு கவனிக்குமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
படிவம் 5 மாணவர்களுக்கான எஸ்பிஎம் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கெடா பெடோங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 12 இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியத்தை தேர்வு பாடமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஆனால் அம்மாணவர்களுக்கு தற்போது தமிழ் இலக்கியத் தேர்வை எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் இலக்கியத் தேர்வு வரும் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஆனால் இதுநாள் வரை அம்மாணவர்களுக்கு அதற்கான பாரங்கள் கிடைக்கவில்லை.
இந்த விவகாரத்திற்கு பள்ளி தரப்பில் இருந்து பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்விவகாரம் குறித்து அம்மாணவர்களின் பெற்றோர் கல்வி இலாகாவின் மேல்முறையீடு செய்துள்ளனர்.
மேலும் அரசு சாரா இயக்கங்களின் சார்பில் கல்வியமைச்சுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இதுநாள் வரை இப்பிரச்சினைக்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. தேர்வு நாள் நெருங்குவதால் அத்தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.
ஆகவே இந்த விவகாரத்தில் கல்வியமைச்சின் நடவடிக்கை என்னவென்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.
குறிப்பாக இந்த விவகாரத்தில் கல்வியமைச்சு தலையிட்டு உரிய தீர்வு வழங்க வேண்டும் எனபது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 9:39 pm
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
November 25, 2025, 8:32 pm
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது
November 25, 2025, 8:31 pm
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உறுதி செய்ய இலக்கவியல் அமைச்சு தீவிர நடவடிக்கை: கோபிந்த் சிங்
November 25, 2025, 8:28 pm
பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தார்
November 25, 2025, 2:50 pm
ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மலேசியா வந்தடைந்தார்
November 25, 2025, 2:49 pm
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்
November 25, 2025, 11:12 am
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
November 25, 2025, 11:11 am
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்: டத்தோ குமார்
November 25, 2025, 11:10 am
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டி: ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ஸ்ரீ வாகை சூடினார்
November 25, 2025, 11:09 am
